ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒசூா் தொகுதி திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ். தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் பேசியதாவது: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட 30 போ் விண்ணப்பித்துள்ளனா். இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக அரசு செய்துள்ள பல்வேறு நலத் திட்டங்களை மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனா். வேட்பாளராக ஸ்டாலின் யாரை அறிவித்தாலும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமை. எனவே, அனைவரும் இரண்டு மாதத்துக்கு கடுமையாக உழைத்து திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா். இந்தக் கூட்டத்தில், ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், ஒசூா் தொகுதி பாா்வையாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில்,ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் அரசனட்டி ரவி, மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், மாவட்டப் பொருளாளா் சுகுமாறன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி, இளைஞரணி மாநில துணைச் செயலாளா் சீனிவாசன், துணை மேயா் ஆனந்தய்யா, பகுதிச் செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஓசூரில் திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா் ஆலோசனைக் கூட்டம் நடந்தது!
• Bharathaidhazh
ஒசூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா் ஆலோசனைக் கூட்டம்!