சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட துணை இயக்குனர் மருத்துவம் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நல அலுவலகத்தில் அலுவல கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகின்ற கலை ஆர்வலர் பா.ஜோணி அமிர்த ஜோஸ் சிறப்புரையாற்றினார். ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். அம்பிகா அனைவருக்கும் நன்றி பாராட்டினார்.
விழாவில் நித்திரவிளை ஏலாக்கரை பகுதியில் வசித்து வருபவரும் வேங்கோடு பெதனி நவஜீவன் சி.பி.எஸ்.சி பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ்ன் அனைத்து உலக சாதனைகளுக்கும் பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
இவ்விழாவில். ஏழைகளுக்கு துணிகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் மற்றும் நிர்வாகிகள். பொதுமக்கள். பலர் கலந்துக் கொண்டனர்.