வளம் மீட்பு பூங்காவில் ரூ.44.72 லட்சத்தில் நடைபெறும் திட்ட பணியான பழைய குப்பைகளை பையோமைனிங் முறையில் தீர்வு செய்தல், ரூ.20 லட்சத்தில் நடைபெறும் வின்ரோ பிளாட்பார்ம் அமைத்தல் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் ரூ.334.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி வாரவ்சந்தை கட்டிட பணி மற்றும் ரூ.144.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் எரிவாயு தகன மேடை அமைக்கும் கட்டிட பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். மேலும், காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட கிரீன் சாம்பியன் விருதை பார்வையிட்டு பாராட்டினார். இதில்
காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ், துணை தலைவர் சுதா சிவசெல்வராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காளியப்பன், செயற்பொறியாளர் கருப்பையா, உதவி செயற் பொறியாளர்கள் திருமலைவாசன், கங்காதரன், காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது, இளநிலை பொறியாளர் ரமேஷ், காட்டுப்புத்தூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.