ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
இந்த விபத்து தொடர்பாக ஆம்னி பஸ் டிரைவர் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்.
லஞ்சம் கேட்டதாக ஆடியோ இதற்கிடையே, பல நாட்கள் ஆகியும் அந்த ஆம்னி பஸ்சை விடுவிக்காமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால், ஆம்னி பஸ் உரிமையாளர், ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் முருகேசனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது பஸ்சை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.50 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார்.
ஆம்னி பஸ் உரிமையாளரிடம் காவல் ஆய்வாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த ஆடியோ தொடர்பாக விசாரணை நடத்த தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார். அதன்பேரில், மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் காவல் ஆய்வாளர் முருகேசன் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. பணியிடை நீக்கம் இதனை தொடர்ந்து, ஆம்னி பஸ் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் ஆய்வாளர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவிட்டார். ஏற்கனவே, வழக்கு விசாரணைக்கு லஞ்சம் கேட்டதாக காவல் ஆய்வாளர் முருகேசன் மீது பல புகார்கள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்