தகவல் அறியும் உரிமைச் சட்டம்-
2005 இன் 6 வது பிரிவில் தகவல் பெறுவதற்கான கோரிக்கை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை விளக்குகிறது!
6(1) இந்த சட்டத்தின்படி அரசிடம் தகவல் பெற விரும்பும் ஒருவர் ஆங்கிலம், ஹிந்தி, & விண்ணப்பம் செய்யப்படுகிற வட்டார ஆட்சி மொழியில் எழுத்து மூலமாக அல்லது மின்னனு சாதானம் மூலமாக வகுத்துரைக்கப்படும் கட்டணத்துடன் தொடர்புடைய பொது அதிகார அமைப்பின் மையப் பொதுத்தகவல் அலுவலருக்கு அல்லது நேர்வுக் கேற்ப மாநிலப் பொதுத்தகவல் அலுவலருக்கு மையப் பொது உதவி பொதுத்தகவல் அலுவலருக்கு அல்லது நேர்வுக்கேற்ப மாநில உதவி பொதுத்தகவல் அலுவற்றுக்கு மனுதாரால் நாடப்படும் தகவல் குறித்த விபரங்களை கூறி கோரிக்கை ஒன்றை செய்யலாம் அது வேண்டுகோள் விண்ணப்பமாக கருதப்படும்.
6(2) வது பிரிவில் தகவலுக்காக கோரிக்கை ஒன்றை செய்கிற விண்ணப்பதாரர் அத்தகவல் எதற்காக தேவைப்படுகிறது என்ற காரணத்தைக் கூற வேண்டிய அவசியமில்லை. Hi6(3) எந்தவொரு தகவலும்(i) பிறிதொரு பொது அதிகார அமைப்பினால் பராமரித்து வரப்படுகிறதோ & (ii) பிறிதொரு அதிகார அமைப்பின் செயற்பணிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளதாக அதன் உருப் பொருளை கொண்டிருக்கிறதோ
அந்தத் தகவலைக் கோரி ஒரு பொது தகவல் அலுவலரிடத்து விண்ணப்பித்திருக்கும் பட்சத்தில் அந்த விண்ணப்பத்தில் கோரியிருந்த தகவல்கள் எந்தப் பொது அதிகார அமைப்பிடம் உள்ளதோ அந்தப் பொதுத்தகவல் அலுவலருக்கு விண்ணப்பம் பெற்றுக்கொண்ட
5 தினங்களுக்குள் அனுப்பிதந்து மனுதாரரின் கோரிக்கையை பகுதியாகவோ- முழுமையாகவோ தகவல்கள் கிடைக்க உதவி செய்தல் வேண்டும் என வகுத்துரைத்துள்ளது
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 இன் 7 வது பிரிவு மிக முக்கியமான பிரிவாகும் "மனுதார் கோரிக்கையை தீர்வு செய்தலுக்கான பிரிவாகும்.
பிரிவி:7 (1) இல் 30 தினங்களுக்குள் தகவல்களை வழங்க வேண்டும் என்று பொதுத் தகவல் அலுவலரின் பணியை வரையறுக்கிறது பிரிவு:7(2) இல் மனுதாரின் வேண்டுகோளைப் பெற்ற பொதுத்தகவல் அலுவலர் குறித்துரைக்கப்பட்ட 30 தினங்களுக்குள் தகவல்களோ அதற்குரிய பதிலோ வழங்கத் தவறும் பட்சத்தில் தகவல் வழங்க மறுப்பதாக கருதி மேல்முறையீடு செய்யலாம்.
பிரிவு: 7(3)இல் குறித்துரைக்கப்பட்டது மனுதார் கோரியுள்ள தகவல்கள் மொத்தம் எத்தனைப் பக்கங்கள் உள்ளது என்பதையும் அத்தகவல்களுக்கு மொத்தம் எவ்ளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் மனுதாருக்கு பொது தகவல் அலுவலார் தெரிவித்து கடிதம் வழங்க வேண்டும் என்பதையும் மிக அழகாக விளக்கி கூறியுள்ளது.
பிரிவு: 7(4) மனுதாரர் கோரியுள்ள தகவல்களை அலுவலக கோப்புகளில் மனுதாரரே நேரில் பார்வையிட்டு அவருக்குத் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு பொதுத்தகவல் அலுவலர் உதவி செய்ய வேண்டும் என்று வரையறுத்துள்ளது.
பிரிவு: 7(5) தகவல் அச்சடிக்கப்பட்ட படிவத்தில் அல்லது மின்ணனுப் படிவம் எதிலும் அளிக்கப்பட வேண்டிய திருக்கிறவிடத்து மனுதாரர் 6 வதுபிரிவில் வகுத்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்துதல் வேண்டும் (வரம்புரையாக) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வகுத்துரைக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக- அல்லது உரிய மாநில அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படுகிற கட்டணம் எதுவும் வசூலிக்கப்படலாகாது
பிரிவு: 7(6) தாமதமாக வழங்கப்படுகின்ற தகவல்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்காமல் இலவசமாக வழங்கப் படுதல் வேண்டும். பிரிவு: 7(7) இல் தகவல் வழங்கலாம்/ அல்லது வேண்டாம் என்பதை மூன்றாம் தரப்பினருக்கு தகவல் வழங்குவது குறித்து ஒரு தீர்மானமான முடிவு எடுக்க வேண்டும்
பிரிவு: 7(8) இல் மனுதாரின் வேண்டுகோள் கோரிக்கை மறுக்கப்படும் போது அப் பொதுத் தகவல் அலுவலர் 1) மறுப்பதற்கான நியாயமான காரணத்தையும், 2) மறுக்கப்பட்ட பின்னர் முதல் மேல்முறையீடு எவ்வளவு காலத்திற்குள் மனுதாரால வழங்கப்பட வேண்டும் என்ற கால வரையறையை தெரிவித்தும் 3)௳எல்முரையீட்டு அதிகார அமைப்பு அதன் விலாசம் ஆகிய விபரங்களையும் தெரிவித்தல் வேண்டும்.
பிரிவு: 7(9) இல் பிரச்சினைக் குரிய தகவல்களை / பதிவுருக்களை பாதுகாக்க வேண்டியதுள்ளது என்றாலும் தகவல் வழங்குவதால் தீங்கு நேருமோ என்று அச்ச முற்றாலும் அத்தகவல்கள் வழங்கத்தேவையில்லை அப்படி எதுவும் இல்லையென்றால் அத்தகவல் மனுதார் ஆசைப்பட்டபடியே மனுதாருக்கு வழங்கப்படுதல் வேண்டும்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 இன் 11வது பிரிவு மூன்றாம் தரப்பினர் தகவல் பிரிவு.-(1) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட ஒரு கோரிக்கையின் பேரில் ஒரு மையப் பொதுத்தகவல் அலுவலர் அல்லது நேர்வுக்கேர்ப மாநில பொதுத்தகவல் அலுவலர் மூன்றாம் தரப்பினருடன் தொடர்புடையாதாக அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது அந்தம் தரப்பினற்றால் அது இரகசியமானதென கருதப்படுகிற தகவல் அல்லது பதிவுரு அல்லது அதன் பகுதி எதனையும் வெளியிடக் கருதுகிற விடத்து CPIO அல்லது நேர்வுக்கேற்ப PIO அந்தத்தகவலை அல்லது பதிவுருவை அல்லது அதன் பகுதியை வெளிவ்யிட விரும்புகிறார் என்னும் பொருண்மை பற்றியும் மூன்றாம் தரப்பினருக்கு எழுத்து வடிவிலான அறிவிப்பு ஒன்றை அளித்து அந்தத் தகவலை வெளியிட வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி எழுத்து வடிவில் அல்லது வாய்மொழியாக தனது கருத்தை பணிந்தனுப்புமாறு மூன்றாம் தரப்பினரைக் கோருதல் வேண்டும் மற்றும் அந்தத் தகவலினை வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கும் போது மூன்றாம் தரப்பினரால் அளிக்கப்பட்ட கருத்து கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.
(வரம்புரையாக) சட்டத்தினால் பாதுகாப்பு அளிக்கப்பட்ட தொழில் அல்லது வாணிபரகசியங்கள் பொறுத்த நேர்வில் வெளியிடுவதில் பொது மக்களுக்கு ஏற்படும் நலன் மூன்றாம் தரப்பினரின் நலங்களுக்கு ஏர்படும் ஊறு அல்லது கேடு எதனையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமாயின் வெளியிடுவதை அனுமதிக்கலாம்
பிரிவு - (2) (1) ஆம் உட்பிரிவின்படி மையப் பொதுத்தகவல் அலுவலரால் அல்லது நேர்வுக்கேற்ப PIO வால் மூன்றாம் தரப்பினருக்கு தகவல் அல்லது பதிவுரு அல்லது அதன்பகுதி தொடர்பாக அறிவிப்பு ஒன்று சார்பு செய்யப்படுகிர விடத்து மூன்றாம் தரப்பினர் அந்த அறிவிப்பு பெறப்பட்ட தேதியில் இருந்து 10 நாட்களுக்குள் வெளியிடக்கருதியதை எதிர்த்து முறையீடு செய்வதற்கு வய்ப்பு கொடுக்கப்படுதல் வேண்டும்.
பிரிவு - 3 (7 ஆம் ) பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும் PIO 6 ஆம் பிரிவின்படியான கோரிக்கையினைப் பெற்றபின்பு 40 நாட்களுக்குள் (2) ஆம் உட்பிரிவின் படி சார்பாற்றத்தினை செய்வதற்கு வாய்ப்பு ஒன்று அளிக்கப்படுமாயின் அந்தத் தகவலினை பதிவுருவை அல்லது அதன் பகுதியினை வெளியிடலாமா அல்லது வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்து தமது முடிவு பற்றிய அறிவிப்பை எழுத்து வடிவில் மூன்றாம் தரப்பினருக்கு அளிக்கலாம்.
பிரிவு 4 (3) ஆம் உட்பிரிவின்படி அளிக்கப்பட்ட அறிவிப்பு ஒன்று 19 ஆம் பிரிவின்படி அந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு எவருக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டதோ அந்த மூன்றாம் தரப்பினா உரிமை கொண்டவர் எங்கிற விவர உரையினை உள்ளடாக்கியிருத்தல் வேண்டும்
என்று வரையறுத்துள்ளது மூன்றாம் தரப்பினருக்கான இதர விவரங்கள் சுருக்கம் பிரிவு 2 ல் விளக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் ஒரு பொது தகவல் அலுவலர் மனுதாரின் வேண்டுகோள் விண்ணப்பத்திற்கு / கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை என்றாலும் அவர பதில் திருப்தியளிக்கவில்லை என்றாலும் குறைவுற்ற தகவல்கள் வழங்கப் பட்டிருந்தாலும், தவறான தகவல்கள் வழங்கியிருந்தாலும் அது குறித்து பாதிக்கப்பட்ட எவர் ஒருவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்- 2005 இன் 19 வது பிரிவைப் பயன்படுத்துவது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பிரிவு:19(1) கோரிய தகவல் கிடைக்கப்பெறாதபோது - குறைவுற்ற தகவல்கள் பெற்றிருப்பினும்- தவறான தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பினும் அது குறித்து முதல் மேல்முறையீட்டு அதிகாரிக்கு வேண்டுகோள் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த நாளில் இருந்து 30 தினங்களுக்கு மேல் முதல் மேல்முறையீடு தாக்கல் செய்யலாம்.
பிரிவு19 (2) இல் மூன்றாம் தரப்பு தகவலை வெளிப்படுத்துவதற்கு மாநில - மத்திய பொதுத்தகவல் அலுவலரால் பிறப்பித்த ஆணைக்கு எதிராக மேல் முறையீடு தாக்கல் செய்யப்படுகிறவிடத்து தொடர்புடைய மூன்றாம் தரப்பினர் அந்த மேல் முறையீட்டை பொது தகவல் அலுவலரின் ஆணை பிறப்பித்த 30 தினங்களுக்குள் மேல்முறையீட்டை செய்தல் வேண்டும்.
பிரிவு:19: (3) மத்திய மாநில பொதுத்தகவல் அலுவலர் / முதல் மேல்முறையீட்டு அதிகாரி ஆகியோரிடம் இருந்து கோரிக்கை நிறைவேற்றுகை செய்யப்படாத போது மாநில தகவல் ஆணையருக்கு இரண்டாம் மேல்முறையீடுதனை தாக்கல் செய்யலாம்.
பிரிவு: 19 (4) இல் மூன்றாம் தரப்பினர் தகவல்கள் என மத்திய - மாநில பொதுத்தகவல் அலுவலர்- முதல் மேல்முறையீட்டு அதிகாரி ஆகியோரின் நடவடிகையினால் அதிருப்தியுற்ற ஒருவர் மாநில தகவல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க வாய்ப்பு நல்கும் பிரிவாகும்.
பிரிவு: 19 (5)மேல் முறையீட்டு நடவடிக்கைகள் அனைத்திலும் கோரிக்கை மறுக்கப்பட்டிருப்பின் மறுக்கப்பட்டது சரியானது என்பதை மெய்பிக்கும் பொறுப்பும் கடமையும், மத்திய- மாநில பொதுத்தகவல் அலுவலர்/ முதல் மேல் முறையீட்டு அதிகாரி ஆகியோரையே சாரும்.
பிரிவு !9(6) இல் முதல் மேல் முறையீடானது கிடைக்கப் பெற்ற காலங்களில் இருந்து 30 அல்லது வேண்டுகோள் தேதியில் இருந்து 45 தினங்களுக்குள் மனுதாருக்கு முதல் மேல்முறையீட்டு அதிகாரி பதில் வழங்க வேண்டும் என்று கடப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.
பிரிவு: 19 (7) மத்திய தகவல் ஆணையத்தின் அல்லது மாநில தகவல் ஆணையத்தின் முடிவுகள் நேர்வுக் கேற்ப அரசையும்- மனுதாரரையும் கட்டுப்படுத்துவதாக இருக்கும்.
பிரிவு: 19(8) மத்திய தகவல் ஆணையம் நேர்வுக் கேற்ப மாநில தகவல் ஆணையம் (அ) தன்னுடைய முடிவில் (1) அவ்வாறு வேண்டுறுத்தப் படுமாயின் குறிப்பிட்ட வடிவத்தில் தகவல் பெறும் வாய்பளித்தல் (2)மத்தியப் பொதுத்தகவல் அலுவலர்/ மாநில பொதுத்தகவல் அலுவலரை பணியில் அமர்த்துதல் (3) குறித்த சில தகவல்கள் அல்லது தகவலின் வகைகளை வெளியிடுதல் (4) பதிவுருக்கலை பேணிவருதல் மேலாண்மை செய்தல் அழித்தல்
(5) தன்னுடைய அலுவலர்களுக்கு தகவல் பெறும் உரிமை குறித்த பயிற்சியினை விரிவு படுத்த வகை செய்தல் ஆண்டறிக்கை தயாரிக்க வகை செய்தல் உள்ளடங்களாக இந்த சட்டத்தின் வகை முறைகளுக்கு இணங்கி இருக்குமாறு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது அதிகார அமைப்பினை வேண்டுறுத்தும் அதிகாரம் உடையதும் ஆகும்.
(ஆ) இழப்பு அல்லது பாதிப்பை உண்டாக்கிய பிற கேடு எதற்காகவும் முறையீட்டாளருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு பொது அதிகார அமைப்பை வேண்டுறுத்தும் அதிகாரம் உடையதுமாகும்.
(இ) இந்த சட்டத்தின் படி வகை செய்யப்பட்ட தண்டணைகள் எதனையும் விதிக்கும் அதிகாரம் உடையதுமாகும்.
(ஈ) விண்ணப்பத்தினை ஏற்க மறுக்கும் அதிகாரம் உடையதுமாகும்
பிரிவு: 19 (9) மத்திய - மாநில தகவல் ஆணையம் முறையீட்டாளாருக்கும் பொது அதிகார அமைப்பிற்கும் தன்னுடைய முடிவு குறித்த அறிவிப்பினை வழங்குதல் வேண்டும்
பிரிவு: 19 (10) இல் மத்திய - மாநில தகவல் ஆணையம் வகுத்துரைக்கப்பட்ட நடைமுறைக்கு இணங்க மேல் முறையீட்டினை முடிவு செய்தல் வேண்டும்
தகவல் அறியும் உரிமை சட்டம் – புகார் அளிக்கும் பிரிவு 18(1) – ஒரு அலசல். தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 18(1)-ன் கீழ் தகவல் வழங்கப்படவில்லை என ஒருவர் தகவல் ஆணையத்திடம் புகார் கொடுக்கும் போது அந்த புகாரின் பேரில் தகவல் ஆணையர் மனுதாரருக்கு தகவல் வழங்க ஆணையிடலாமா என்ற கேள்விக்கு இந்த உச்சநீதிமன்ற நீதிப்பேராணை (Chief Information Commr.& Anr vs State Of Manipur & Another ( MANU/SC/1484/2011) விடை அளிக்கின்றது.
.
இந்த பிரச்சனையில், மனுதாரருக்கு தகவல் கிடைக்கவில்லை என பிரிவு 18(1)-ன் கீழ் தகவல் ஆணையத்திடம் புகார் செய்கின்றார் அந்த புகாரை விசாரித்த தகவல் ஆணையர், மனுதாரருக்கு 15 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று பொது தகவல் அலுவலருக்கு ஆணையிடுகின்றார் இந்த ஆணையை எதிர்த்து மனுதாரரின் வழக்கு உச்சநீதிமன்றம் வரை செல்கின்றது அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கீழ்கண்டவாறு எடுத்துரைக்கின்றது.
.
31. We uphold the said contention and do not find any error in the impugned judgment of the High court whereby it has been held that the Commissioner while entertaining a complaint under Section 18 of the said Act HAS NO JURISDICTION TO PASS AN ORDER PROVIDING FOR ACCESS TO THE INFORMATION."
.
"37. We are of the view that Sections 18 and 19 of the Act serve two different purposes and lay down two different procedures and they provide two different remedies. One cannot be a substitute for the other.
.
42. Apart from that the procedure under Section 19 of the Act, when compared to Section 18, has several safeguards for protecting the interest of the person who has been refused the information he has sought. Section 19(5), in this connection, may be referred to. Section 19(5) puts the onus to justify the denial of request on the information officer. Therefore, it is for the officer to justify the denial. There is no such safeguard in Section 18. Apart from that the procedure under Section 19 is a time bound one but no limit is prescribed under Section 18. So out of the two procedures, between Section 18 and Section 19, the one under Section 19 is more beneficial to a person who has been denied access to information.
பிரிவுகள் 18 மற்றும் 19, வெவ்வேறு நோக்கம் கொண்டவைகள். இரண்டும் வெவ்வேறு வகையான பரிகாரங்களை வழங்குகின்றது. ஆகவே, தகவல் கிடைக்கவில்லை என மனுதாரர் பிரிவு 18(1)-ன் கீழ் தகவல் ஆணையத்திடம் புகார் அளித்தால், கோரிய தகவலை வழங்க ஆணையிட அந்த பிரிவின் படி தகவல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஆணையிடுகின்றது. மேற்படி உச்சநீதிமன்ற நீதிப்பேராணையின் அடிப்படையில் Dr. Deepak Juneja vs. Central Information Commission ... on 29 April, 2019 என்ற நீதிப்பேராணையில், டெல்லி உயர்நீதிமன்றமானது கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது.
14....The writ appeal was disposed of by the order dated July 29, 2010 wherein the Division Bench has held that under Section 18 of the Act the Commissioner has no power to direct the respondent to furnish the information and further held that such a power has already been conferred under Section 19(8) of the Act on the basis of an exercise under Section 19 only.
ஆகவே பிரிவு 18(1)-ன் கீழ் மனுதாரர் கீழ்கண்ட காரணங்களுக்காக புகார் அளித்தால்
.
1) பொது தகவல் அலுவலர் மற்றும் மேல் முறையீட்டு அலுவலர் நியமிக்கப்படாததால், மனுக்களை ஏற்க மறுப்பது
2) தகவல் வழங்க மறுப்பது
3) குறித்த கால வரம்பிற்குள் தகவலை வழங்க மறுப்பது
4) நியாமற்ற கட்டணம் கோருவது
5) முழுமையற்ற, பொய்யான தகவலை வழங்குவது
6) பதிவுருக்களை பெறுவதற்கு தடையாக உள்ள இதர விஷயங்கள் ப்றறிய தகவல் ஆணையமானது அந்த புகாரை சட்டப்படியாக விசாரணை செய்து பொது தகவல் அலுவலருக்கு பிரிவு 20(1) மற்றும் பிரிவு 20(2)-ன் கீழ் தண்டனை வழங்கலாம்.
.
பிரிவு 18(1) -ன் கீழ் தகவல் ஆணையத்திடம் புகார் அளிக்கும் போது, பொது தகவல் அலுவலருக்கு பிரிவு 20(1)(2)-ன் கீழ் தண்டனை வழங்குமாறு மனுதாரர் கோரிக்கை வைக்க வேண்டும்.
.
ஆனால், மனுதாரர் ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது. பிரிவு 18(1)-ன் கீழ் தகவல் ஆணையத்திற்கு புகார் அளிக்கும் போது தகவல் கிடைக்க வாய்ப்பில்லை தகவல் வேண்டும் என்றால் பிரிவு 19(3)-ன்படியே இரண்டாம் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
தகவல் வழங்காததற்கு பிரிவு 19(8)(b)-ன் படி இழப்பீடு கோரினால், அதை பிரிவு 19(3)-ன் படி இரண்டாம் மேல் முறையீடாகத்தான் செய்ய வேண்டும்.