லஞ்ச ஊழலில் கொடிகட்டி பறக்கும் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ர.ஆனந்தன்..?

கரப்ஷன் கலெக்சனில் எக்ஸிக்யூவ்ட் ஆபீசர் ர.ஆனந்தன்...?

திருப்பூர் மாவட்டம் என்றாலே நமக்கு  நினைவில் வரக்கூடியது நம் உடுத்தும் ஆடைகள் தான் அப்படி பேர் போன மாவட்டம் திருப்பூர் மேலும் தொழில் நிறுவனங்கள் அசுர வளர்ச்சியில் இயங்கி வரும் இந்த மாவட்டம் தற்போது பல அம்சங்களை கொண்டு கம்பீரமாக நிற்கும் திருப்பூர் மாவட்டம் விளங்குகிறது இதில் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியின் அவல நிலை.!
கடந்த ஒரு வருடமாக எந்தவித கட்டமைப்பு மற்றும் நிர்வாக செயல்பாடுகள் இல்லாமல் கோமாவில் இருக்கும் சிறப்பு நிலை பேரூராட்சி.! இந்தப் பேரூராட்சியில் தற்போது பணியாற்றி வரும் கரப்ஷன் கலெக்ஷன் என்ற வார்த்தைக்கு பேர்போன எக்ஸிக்யூடிவ்ட் ஆபீசர் ர.ஆனந்தன் பணியாற்றி வருகிறார் 

இவர் வேலூர், சென்னை பேரூராட்சிகள் மண்டலத்திற்கு உட்பட்ட ஒடுகத்தூர், அம்மு, திருவலம், சேத்துப்பட்டு, போளூர், திமிரி, ஸ்ரீ பெரும்புதூர் போன்ற பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றியவர் தான் ர.ஆனந்தன் இவர் வேலூர் மாவட்டம் காட்பாடி  பவானி நகர் பகுதியை சேர்ந்தவர்  திருவண்ணாமலை மாவட்டம்  சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி பணியாற்றி வந்த இவர் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் பணியிடம் மாறுதலாகியாபிறகு  திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேரூராட்சிகள் நகராட்சியாக மாற்றப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு வெளியிட்டார் திருப்பூர் பேரூராட்சிகள் மண்டல பகுதிகளில் உட்பட்ட பணியிடம் மாறுதலாகி அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் ஒரு பெரிய தொகை பார்த்துவிடலாம் என்று திருப்பூர் மாவட்டம் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சிகையே தேர்வு செய்து துறை அமைச்சர் மற்றும் இயக்குனர் வரை பணத்தை வாரி இறைத்து  பணியிடம் மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம். அவிநாசி சிறப்பு பேரூராட்சியின் நிர்வாகத்தில் லஞ்ச ஊழலில் கொடிகட்டிப் பறந்ததை யாராலும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

தற்போதும் தொடரும் செயல் அலுவலர் ர.ஆனந்தன் மூலமாக அவல நிலை!
 அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் லஞ்சம் வாங்கும் பட்டியல்.!

1. 500 சதுர அடி வீட்டிற்கு அனுமதி வழங்க 2500 ஆயிரம் லஞ்சம்.
2). 500 சதுர அடிக்கு மேல் ஆயிரம் சதுரடி வரை அனுமதி 25 ஆயிரம் லஞ்சம்.
3). 1000 சதுர அடிக்கு மேல் 2000 சதுர அடி வரை கட்டும் வீட்டிற்கு அனுமதி தர 50,000 ரூபாய் லஞ்சம்.

4). வணிகரீதியான கடைகளுக்கு
100 சதுரடி உள்ள ஒரு கடைக்கு அனுமதிக்கு வழங்க 10000 ரூபாய்
5) இரண்டு மாடி அல்லது மூன்று மாடி வரை வணிக வளாகம் கட்டும் கட்டிடத்திற்கு அனுமதி வழங்க ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை லஞ்சம்.
6) அதுபோல் சாலைகளில் நடைபாதை கடைகளுக்கு அனுமதி வழங்க ஒரு கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் .
7). திருமண மண்டபங்கள் அனுமதி வழங்க 10 லட்சம் வரை லஞ்சம்.
8) குடிநீர் குழாய் இணைப்பு வீடுகளுக்கு வழங்க 20 ஆயிரம் ரூபாய் 10 வருடம் முன்பே லஞ்சம் வாங்கியதாக தகவல்!
இப்படி  அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் லஞ்ச பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது என்ற தகவலை சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாதம் 10 லட்சம் ரூபாய் வரை பேரூராட்சிக்கு லஞ்சமாக வருவதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது.
இப்படி பல கோடி வரை அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் லஞ்சம் ஊழல் நடந்ததாக தகவல் வந்துள்ளது.

கடந்த ஒரு 5 மாதத்திற்கு முன்பு அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு செயல் அலுவலர் ர.ஆனந்தன் பணியிட மாறுதலில் வந்தவுடன் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து ஃபைல் மற்றும் காசோலைகளை எடுத்து தனது கண்ட்ரோலில் பேரூராட்சியில் பல லட்சம் ரூபாய் வரை பல பெயர்களில் காசோலைகளை போட்டு பணத்தை எடுத்து ஊழல் செய்து வருகிறாராம்  செயல் அலுவலர் ர.ஆனந்தன்

அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் ஒரு சில பணியாளர்களை வைத்து இடைத்தரகர்களை ஆதிக்கம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இடைத்தரகர்களை வைத்து மட்டுமே அனைத்து பணியும் நடைபெறுவதாகவும் நேரடியாக பொதுமக்களுக்கு பேரூராட்சி. அலுவலர்கள் எந்தப் பணியையும் செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நியாயமான முறையில் வீடு மற்றும் வணிக ரீதியான கடைகளுக்கு அனுமதி கேட்டால் ஐந்து மாதங்கள் குறையாமல் மனுதாரர்களை அழைக்க விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுபோல் வணிக வளாகங்கள் கட்டி முடிந்த கடைகளுக்கு பல மாதங்களாக வரி போடாமல் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திரைப்பட பாணியில் போல் கொடுக்க வேண்டியதைை கொடுத்துவிட்டால் அனைத்து வேலையும் சுலபமாக முடிந்துவிடும்  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மேலும் எந்த வேலைைைை ஆக வேண்டும் என்றாலும் லஞ்சம் பெற்றுக் கொண்ட பிறகு அனுமதி வழங்குவதாகவும் வரி போடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ர.ஆனந்தனிடம் எது கேட்டாலும் எனக்கு தெரியாது நான் புதிதாக வந்து உள்ளேன் நான் கேட்டு சொல்கிறேன் அலுவலகத்தில் உள்ளவர்கள் யார் பெயரும் எனக்கு தெரியாது யாருடைய தொலைபேசியும் எனக்கு தெரியாது வேண்டுமென்றால் நீங்கள் நேரடியாக பேரூராட்சி அலுவலகத்தில் வந்து கேட்டுக் கொள்ளுங்கள் என்ற பதில் மட்டுமே சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்து விடுகிறார்.

மேலும் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீர்கள் எங்கேயும் செல்லாமல் அப்படியே தேங்கி நிற்பதால் கொசு அதிகமாக உருவாகி டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. என்ற தகவலும் வெளியாகி உள்ளது

இதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் நடவடிக்கை எடுக்காமல் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் வந்துள்ளது.

எது எப்படியோ தற்போது
லஞ்ச ஊழலில் கொடிகட்டி பறக்கும் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியின் அவல நிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  நேர்மையான அதிகாரிகளை நியமித்து பேரூராட்சியில் தணிக்கை செய்து லஞ்ச ஊழல் பெருச்சாளிகளை களை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.  

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் சர்வ சாதாரணமாக  பார்த்தாலே  இவர்கள் பணம் சுருட்டல்களில் No.1...  மேலும் அரசு அதிகாரிகளான ஆடிட்டர்களுக்கும் வம்பு வரும் பட்சத்தில் மட்டும் தான் மேற்கண்ட அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ர.ஆனந்தன், ஊழல் வாதிக்கு முறைகேடான பணிக்கு அதிகாரிகள் துணை போகாமல் அரசுக்கு வந்து சேரவேண்டிய வருமானத்திற்கு ஆடிட் அதிகாரிகளே உரிய கவனமாக இருக்க முடியும் என்பதால் ஆடிட்டர்கள் மீது உள்ள தவறுகளையும் கண்டுபிடித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் செயல் அலுவலர் ர.ஆனந்தன் எங்கு சென்றாலும் ஆடிட்டர்களை கரெக்ட் செய்து வைத்துக்கண்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவட்டு
 தனது காரியத்தை சுலபமாக  முடித்துக் கொள்கிறாராம் 

 அது மட்டுமல்லாது அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் கணக்குகளை சரிபார்க்க வரும் ஆடிட் அதிகாரிகளை விலைக்கு வாங்கும் விதமாக தங்குவதற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்யும் வண்ணம் ஆடிட் அதிகாரிகளுக்கு ஓட்டல்களில் மூன்று வேளையும் அவர்களுக்கு தேவையான சைவ, அசைவ உணவுகள் வெளியில் சென்று வர காஸ்ட்லியான கார்கள்.! தினமும் ஆகும் மற்றும் பணி முடிந்து வீட்டுக்கு திரும்புகிற போது ஆடிட் அதிகாரிக்கு ஒரு பெரிய தொகையை லஞ்சக் கவர்களும்.......... கொடுக்கப்படுவதால் 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் இதுவரை எந்த குறைகளும் நடக்காத மாதிரி ஆடிட்டர்கள் தங்களுடைய விசுவாசத்தை அவிநாசி சிறப்புநிலை பேரூராட்சியில் பணிபுரிந்த ஒவ்வொரு செயல் அலுவலருக்கு தனது விசுவாசத்தை காட்டி விடுவதால் அரசுக்கு போய் சேர வேண்டிய வருமானங்கள் எல்லாம் செயல் அலுவலர் ர.ஆனந்தன் போன்ற ஊழல் அலுவலர்கள் உறவினர்கள் மற்றும் தனது சொந்த சேமிப்பு கணக்கில் போய்ச் சேர்ந்து விடுகிறது, தனது உறவினர்கள் பெயரிலும் கொள்ளையடித்த பணத்தில் சொத்துக்கள் வாங்கி கொடுத்துள்ளதாகவும்.! மேலும் தனது உறவுக்காரர்கள் பெயரில் நிலமோ நகைகளை வாங்கி குவித்த வண்ணம் உள்ளனர் எனவே இந்த முறைகேடான பணிகளை எல்லாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் விசாரணை அதிகாரிகளின் நேர்மையான நடவடிக்கைகளின்  உண்மைகள் வெளிப்படும்,  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

 இதைப் பற்றி தகவல் அறிந்து விசாரிக்கத் தொடங்கிய நமது
 நிருபர்கள் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ர.ஆனந்தனிடம் துருவி, துருவி கேட்டபோது அவர் கூறுகையில் நான் மட்டும் தானா! ஊழல்  செய்கிறேனா...... எனது சக செயல் அலுவலர்களும் ஊழல் செய்கிறார்கள் மேலும் மற்ற அரசு அலுவலர்களும் ஊழலில் ஈடுபடுகிறார்கள் நான் எங்கு பணி மாறுதலாகி செல்வதற்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் கொடு என்று அமைச்சர்கள் முதல் ஏடி இயக்குனர்கள் வரை அதிகாரிகள் என்னை தொந்தரவு செய்கிறார்கள் நான் என்ன செய்ய முடியும் என்னால் முடிந்ததை கொடுத்துவிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று புலம்பித் தள்ளுகிறார் ஒரு புறம் ஊழல் செயல் அலுவலர் ர.ஆனந்தன்..! மேலும் 
கீழ்த்தட்டு முதல் மேல் தட்டும் வரையிலான அமைச்சர்கள் லஞ்சமாக பணம் வாங்கிக் கொண்டு எங்களை பணி அமர்த்துகின்றனர்...! நானும் வேலூர் மாவட்டம் பேரூராட்சிகள் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை மாவட்டம். சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்திற்கு பணி மாறுதலாகி வருவதற்கு ரூபாய் 5, சேத்துப்பட்டில் இருந்து திருப்பூர் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு மாறுதலாகி வந்ததற்கு 10 லட்சம் தற்போது அவிநாசி பேரூராட்சியில் பணியாற்றிய உள்ள நிலையில் இந்த இடத்திற்கு 20 லட்சம் என கொடுத்துவிட்டுபணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று புலம்புகிறார் மேலும் அதிமுக ஆட்சிகாலத்திலும், எப்படி செயல்பட்டார்கள் தற்போது திமுக ஆட்சியிலும் அதுவே தொடர்கின்றது எங்கத் துறை அமைச்சருக்கு கப்பம் கட்டி தான் வந்திருக்கிறேன் இந்த இடத்திற்கு அதை நான் எப்படி எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை ஆகையால் எங்களை பற்றி தகவல் எதுவும் வெளியிட வேண்டாம்..! என புலம்பித் தள்ளுகிறார்,

மேலும் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவையான பெனாயில், பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு, தொடப்பம், குப்பை ஏற்றி செல்லும் வாகனம் பழுதுபார்க்கும் வேலைகள் எனக் கூறி தன் சொல்பேச்சு கேட்டு போலி ரசீது கொடுக்கும் நிறுவனத்தின் மூலமாக போலி ரசீது தயார் செய்து வாங்குவதாக பொருட்களையே வாங்கிய மாதிரி பல லட்ச ரூபாய்களை மக்களின் வரிப்பணத்தை ஊழல் செய்து  சுருட்டி வருவதாக தகவல் பேரூராட்சிகளின் ஒரு சில செயல் அலுவலர் வட்டாரங்கள்  தெரிவித்துள்ளனர்...!

அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ர.ஆனந்தன் பணியாற்றிய பேரூராட்சி  இடங்களில் லஞ்சம்  பெறாமல் எந்த வேலையும் மேற்கொள்ள மாட்டார் அப்படி உடனே கொடுக்க வேண்டிய கமிஷனை கொடுத்து விட்டால் போதும் உடனே கையொப்பம் போட்டு விடுவாராம்.... அதேபோல் வீடு, கடை, கல்லூரிகள், பள்ளிகள் கட்டுமான பணி கட்டும் ஆகியவர்களுக்கு பில்டிங்  அப்புரூவல் வழங்குவதுடன் அதற்கு ஈடாக கணிசமாக ஒரு தொகையை லஞ்சமாக வாங்கி தனது பாக்கெட்டை நிரப்பி கொள்கிறாராம்... இதன் மூலம் இவர் பணியாற்றும் பேரூராட்சிக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகிறாராம்.. அவிநாசி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ர.ஆனந்தன் மேலும் பேரூராட்சியில் உள்ள குப்பை வண்டிகள் அவ்வப்போது சீர் அமைத்ததாக கூறியும், பேரூராட்சிகளில் குப்பை அள்ளும் வண்டிகளுக்கு பெட்ரோல் போட்டதாக கூறியும் போலி ரசீது மூலம் ஏழை மக்களின் வரி பணத்தை சுருட்டி வருகிறாராம், 

இவர் பற்றி பேரூராட்சிகளில் பணியாற்றிவரும் செயல் அலுவலர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறுகின்றனர், எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் திருப்பூர் மாவட்டம் அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில் திடீரென சோதனை நடத்தி அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்வதுடன் பேரூராட்சிக்கு பொருட்கள் வாங்கிய கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அல்லது செயல் அலுவலர் ர.ஆனந்தனின் உறவுக்காரர்கள் வீட்டிலும் தனது வீட்டிலும் சோதனை நடத்தினால் பல கோடி ரூபாய் ஆவணங்களும், அசையும், அசையா சொத்துக்களையும் கைப்பற்ற கூடும் நிலையும் உருவாகி விடும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் 

செயல் அலுவலர் ர.ஆனந்தனின் ஊழல் குறித்து திடீரென பேரூராட்சியில் சோதனை செய்தால் வெளிச்சத்திற்கு வராத பல தகவல்களும் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை, என சொல்லப்படுகிறது.

அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ர.ஆனந்தன் மீது தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் தமிழக முதலமைச்சர் மு‌.க ஸ்டாலினின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.........!