திமிரி சிறப்பு நிலைப் பேரூராட்சி நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கிளர்க் சசிகலா.! லஞ்சத்தில் திளைக்கும் செயல் அலுவலர் ரவிச்சந்திர பாபு..?
இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி சிறப்பு நிலைப் பேரூராட்சியில் செயல் அலுவலராக இருப்பவர் சென்னையை சேர்ந்த ரவிச்சந்திர பாபு இவருக்கு ஆலோசகராக இருப்பவர் வேலூரை சேர்ந்த கிளார்க் சசிகலா தானம் இவர்தான் திமிரி சிறப்பு நிலைப் பேரூராட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறாராம் மக்கள் வரிப்பணத்தில் தினசரி ரூபாய் 10, ஆயிரம் வரை பேரூராட்சி நிர்வாகமே செலவு செய்யலாம் என்ற அரசு விதி உள்ளது அதனை தனக்கு சாதகமாக்கி கொண்டு செயல் அலுவலர் ரவிச்சந்திர பாபு. கிளார்க் சசிகலா ஏதாவது ஒரு காரணம் சொல்லி போலி ரசீது போட்டு தங்களுக்கு லஞ்சத்தை வாரி திளைத்துக் கொள்கிறார்களாம், பேரூராட்சிக்கு தேவையான பெனாயில், பிளிச்சிங் பவுடரும், சுண்ணாம்பு துடைப்பம், என கூறிதான் செலவு பேச்சு கேட்டு போலி ரசீது கொடுக்கும் நிறுவனத்தின் மூலமாக போலிபில் தயார் செய்து வாங்குவதாக பொருட்களை வாங்கிய மாதிரி சுருட்டி வருவதாக தகவல் அதேபோல் கட்டிட அனுமதிக்கும் இவர் ஒப்புதல்
தரவில்லை அதற்கான பேரங்கள் மட்டும் இதுவரை நடந்துக் கொண்டு இருக்கிறது பேரங்கள் மடியும் வரை ஒப்புதல் தர மாட்டேன் என்று அடம்பிடித்து ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டிட அனுமதி கோப்புகளை கிடப்பில் போட்டிருக்கிறாராம் செயல் அலுவலர் ரவிச்சந்திர பாபு இவர் யாரையும் கடுகளவு மதிப்பது இல்லையாம் இவருக்கு வருமானம் ஈட்டக்கூடிய நபர்களாக இருந்தால் மட்டுமே அவர்களை கிளார்க் சசிகலா மூலம் அழைத்து தேநீர் குழம்பி கொடுத்து உபசரிப்பது இவரது வழக்கம் இவர் திமிரி சிறப்பு நிலைப் பேரூராட்சிகளில் மட்டுமல்லாமல் இவர் ஏற்கனவே பணியில் இருந்த ஒடுகத்தூர் பேரூராட்சி, பனப்பாக்கம் பேரூராட்சி, நெமிலி, தக்கோலம், கலவை ஆகிய பேரூராட்சி சென்னை மாங்காட்டில் பணியாற்றிய பேரூராட்சிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதும் அந்த கோப்புகளை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் தூசி தட்டப்பட்டு வருகின்றது என பேரூராட்சி அலுவலக ஊழியர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இது தவிர திமிரி சிறப்பு நிலைப் பேரூராட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வேலூரை சேர்ந்த கிளார்க் சசிகலா கணவர் காவல்துறையில் இருப்பதால் அவர் யாரையும் கடுகளவும் பயப்பட மாட்டாராம் அலுவலக ஊழியர்கள் அவரை கண்டாலே பயந்து நடுங்கி விடுகிறார்களாம் அலுவலகத்துக்கு எந்த செயல் அலுவலர் வந்தாலும் அவர் சொல்பேச்சு கேட்டு தலையாட்டும் பொம்மை போல் நடந்து கொள்ள சூழ்நிலை உள்ளதாம் இது சம்பந்தமாக யாராவது அவரை கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு கவரில் 200 முதல் 500 ரூபாய் போட்டு கொடுத்து விடுவாராம் இது எங்களுடைய வழக்கம் என்று கூறி கொள்வாராம், நான் செயல் அலுவலராக ஆகியிருக்க வேண்டும் இன்னும் ஆக முடியாத சூழ்நிலை காரணம் முந்தைய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அதிக அளவில் லஞ்சம் கேட்ட காரணத்தால் இன்னும் நான் செயல் அலுவலர் ஆக முடியாத சூழ்நிலை நிலவி வருவதாக அனைவரிடமும் புலம்பி வருகிறாராம் அப்படி நான் செயல் அலுவலராக வந்து விட்டால் உங்கள் கோப்புகளில் முதல் கையெழுத்திட்டு உங்களுக்கு என்னால் முடிந்த அனைத்து காரையும் செய்து கொடுப்பேன் என்று சொல்லி வருகிறாராம் இது தவிர பேரூராட்சியில் உள்ள குப்பை வண்டிகள் அவ்வபோது சீரமைத்ததாக கூறியும் போலி ரசீது மூலம் சுருட்டி வருகிறாராம் அதேபோல் துப்புரவு பணியாளர்களுக்கு, தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க கூடிய கையுறை முகக்கவசம் சீருடை கைக்ககூலி தராமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிக்கு ஒதுக்கிய நிதியை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் முக்கிய அதிகாரிகளுக்கு பங்கு கொடுத்து விட்டு கொள்ளையடித்து வருவதாக கூறுகின்றனாராம், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வரும் செயல் அலுவலர் ரவிச்சந்திர பாபுவின் உறவினர்கள், பேரில் உள்ள சொத்துக்களையும் சிறப்பு நிலைப் பேரூராட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் கிளார்க் சசிகலாவின் உறவினர்கள் பெயரில் அசையும் சொத்து அசையா சொத்துக்களையும் வாங்கி குவித்து வருவதாக தகவல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திமிரி சிறப்பு நிலைப் பேரூராட்சியில் திடீரென நுழைந்து சோதனை ஈடுபட்டால் பொருட்கள் வாங்கிய இடங்களிலும் சோதனை செய்தால் வெளிச்சத்திற்கு வராத பல ரகசியங்கள் அம்பலம் ஆகிவிடும் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர், இதுதவிர உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரிகளுக்கும் கொள்ளையடிக்கும் பணத்தில் கணிசமாக ஒரு தொகை கொடுத்து விடுவதால் இவர் உத்தமபுத்திரன் போல் உலா வருகிறாராம் பேரூராட்சியின் வரி வசூல் பணம் அரசு ஒதுக்கிய நிதி எம்பி எம்எல்ஏக்கள் நிதியும் நடந்து இருக்கும் பணிகளையும் உள்ளூர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அனைத்து கட்சி பிரமுகர்களுடன் கூட்டமாக சென்று ஆய்வு செய்தால் திமிரி சிறப்பு நிலைப் பேரூராட்சியில் நடந்த ஒட்டுமொத்த கொள்ளையும் வெளிச்சத்திற்கு வரும் என்கின்றது பேரூராட்சி வட்டாரம் மக்கள், ஊமை ஊரைக் கெடுக்கும் கோட்டான் குடியை கெடுக்கும் என்பது போல் இருக்கும் செயல் அலுவலர் ரவிச்சந்திர பாபு கிளாரக் சசிகலா மீது பேரூராட்சி துறை இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்க போகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்