நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வேலூர் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகளில் தீவிரம்
வேலூர் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளில் தீவிரம்தமிழகத்தில் கொரோனோ பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாகவே தற்போது வரை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி தொடர்ந்து முன் வைக்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கம் தற்போது குறைந்த நிலையில் நாளை (19ம் தேதி) முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வேலூர் மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் உத்தரவின் பேரில் மண்டல சுகாதார அலுவலர்கள் தலைமையில் தூய்மை பணியாளர்களைக் கொண்டு சுத்தம்  செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணியில் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை சுத்தம் செய்தல், மேசை, நாற்காலி உள்ளிட்டவைகளுக்கு மருந்து தெளித்தல், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே.சிவகுமார் மேற்பார்வையில்  தூய்மை பணியாளர்களை கொண்டு கடந்த இரண்டு நாட்களாக தூய்மை பணியும் கிருமிநாசினி தெளித்தல் குப்பை அள்ளுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக அரசு அறிவித்த அனைத்து நடைமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் வகையிலும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.