1977 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். ஆட்சி – மூன்று முறை வெற்றி. அறம் சார்ந்த அரசியல் அரங்கேறியது. குடும்ப அரசியல்கிடையாது
கட்சிக்காரர்கள்,நிர்வாகிகள், அமைச்சர்கள் கண்காணிக்கப்பட்டதால் அச்சத்துடன் இருந்தனர். பதவிபறிக்கப்படலாம்,என்பதால் தவறு செய்யப் பயந்தனர்.
அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் இருந்தது. எவரேனும் ஆளுமை செலுத்த முயன்றால் – தோட்டத்துக்கு சொல்லிவிடுவோம்– என்றனர்.
ஒரு தவறு செய்தால் அதைதெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்று சொல்லியதைப் போலவே தவறுசெய்தவர்களை தண்டித்தார்., பதவிகளில் இருந்து தூக்கினார்
ஆனால்? எம்.ஜி.ஆர்.ஆட்சிக்குப் பிறகு லஞ்சத்தில் பேரம் பேசுவது, பங்கு போடுவது, எல்லை பிரிப்பதுபோன்ற முறைகேடுகள் நிகழ்ந்தது கண்கூடு.
தேச நலனைவிட மக்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை பயக்கும் திட்டம்’ என்று சொன்னதைப் போலவே, ஒவ்வொரு திட்டத்திலும் மக்கள் நலன் முன்னிறுத்தப்பட்டது.
பசிப்பிணியை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் குழந்தைகள் யாரும் பசியால் வாடக்கூடாது என்றுசத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். இந்த திட்டம்தான் தமிழகத்தின் கல்வித் தகுதியைவானளவுக்கு உயர்த்தியுள்ளது.
காமராஜர் அறிமுகப்படுத்திய திட்டத்தில் குழம்பு, கறிகாய் போன்றவை கிடையாது. அது பசிக்கான உணவு மட்டுமே. ஆனால் ஆரம்பம் முதல் தன் வாழ்வில் உடல் நலம் உடல் பயிற்சி ஆகியவற்றில் ஈடுபாடு காட்டி வந்த எம்.ஜி.ஆர் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தில் அவர்களின் உடல்நலனைக் காக்கும் சத்துகள் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இத்திட்டத்தில் சோறு, பருப்பு, காய்கறி, கீரை ஆகிய அனைத்தும் கலந்து சமவிகித உணவாக வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் பிறந்த நான்கு மாதக் குழந்தை முதல் பதினேழு வயது மாணவர்கள் வரைக்குமாகச் சேர்த்து திட்டமிடப்பட்டது. நான்கு மாதக் குழந்தைக்குச் சத்துணவு மாவு உருண்டை காலை பதினோரு மணிக்கு வழங்கப்படும் அதை தாய்மார் வந்து வாங்கி குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. சத்துமாவு பாக்கெட்டுகளைத் தாய்மாரிடம் வீட்டுக்குச் சத்துணவு ஆயாமார் கொடுத்துவிடுகின்றனர். காமராஜர் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் எனத் தொடங்கிய இத்திட்டம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலணி மற்றும் சீருடை என எம்.ஜி.ஆர் குழந்தைகள் நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்க பிரதமர் ராஜீவ் காந்தியிடம் உதவி கேட்டுப் போயிருந்தபோது அதிகாரிகள் காலம் தாழ்த்தினர் உடனே கோபப்பட்டு எம்.ஜி.ஆர் புறப்பட்டுவிட்டார். இவர்கள் கொடுக்காவிட்டால் நாம் வீட்டுக்கு ஒரு ரூபாய் என வசூலித்து இத்திட்டத்தைக் கொண்டுவருவோம் என்றார். அதன்பிறகு அவரைச் சமாதானப்படுத்தி பிரதமரின் உதவியாளர் எம்.ஜி.ஆரை அழைத்து நிதி உதவி செய்வதாக ஒப்புக்கொண்டார். இந்தத் துணிச்சல் எம்.ஜி.ஆர் கூடப் பிறந்தது ஆகும். அவர் தான் செய்ய நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செய்து வெற்றி பெறுவார்.
தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறிய போது அரசு அதிகாரிகள் அரசிடம் அவ்வளவு நிதி இல்லை என்றனர். உடனே எம்.ஜி.ஆர் கோபத்துடன் உங்கள் நிதியே தேவையில்லை என் மக்களிடம் நிதி பெற்று நான் இத்திட்டத்தை நிறைவேற்றுகிறேன் என்றார். உடனே சத்துணவு நிதி ஒன்றை அறிவித்தார். நல்ல உள்ளங்கள் தாராளமாக உதவின. அவரை வளர்த்துவிட்ட திரையுலகினர் முதலில் உதவ முன்வந்தனர். பின்பு தொழிலதிபர்கள் வந்தனர். பலர் தம் ஒரு நாள் சம்பளத்தை ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து உதவினர். இது உலகுக்கே ஒரு முன்னோடி திட்டமாக உருவாயிற்று.
எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய சத்துணவுத் திட்டம், கல்வித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. பள்ளிக்கூடம் பக்கமே திரும்பாமல், கூலி வேலைக்கு செல்லும் கட்டாயத் திலிருந்த கிராமப்புற ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரச் செய்தது இத்திட்டம். உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு அனைத்து மாநில அரசுகளும் இத்திட்டத்தைப் பின்பற்ற பரிந்துரைத்தது.
குழந்தை வளர்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடு பெரும் சிக்கலாக இருந்துவந்த காலத்தில் சிறப்பான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். குழந்தைகள் 5 வயதை எட்டியபின்னரே பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அதுவரை, உணவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் வகையில் கொண்டுவந்த திட்டம் இந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம். நடுவண் அரசு ஒதுக்கிய தொகையைவிட அதிகமாக ஒதுக்கி அத்திட்டம், தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்த ஏற்பாடு செய்தார். அது இன்றளவும் தொடர்கிறது.
பெண்களுக்கும் வேலை கிடைத்தது. சத்துணவு திட்டத்திற்காக அவர் ஒரே நாளில் பத்தாயிரம் பெண்களுக்கு வேலை அளித்தார்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயாக்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனால்ஆயிரக்கணக்கான குடும்பத்தில் வறுமை விலகியது.
- ரேஷன்கடைகளில் அரிசி விற்பனையை சீர்படுத்தினார். அரிசி விலையை 1.75 ரூபாய்க்குகட்டுப்படுத்தினார். ரேசன் கடையில் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதை உணர்ந்தஎம்.ஜி.ஆர். தமிழ்நாடெங்கும் 20 ஆயிரம் ரேஷன் கடைகளைத் திறந்து 20,000 பேருக்குவேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அதனால்தான் என்றென்றும் ஏழைகள் இதயத்தில் எம்.ஜி.ஆர்.வாழ்ந்தார்.
ஒரு விளக்குத் திட்டம்எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்டது. குடிசையில் வாழும் மக்களும் மின்சாரம் பெறவேண்டும்என்பதற்காக ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு இலவச மின்சார விளக்கு பொருத்துவதைலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். இதுவே பின்னர் இருவிளக்கு திட்டமாக மாற்றம்அடைந்தது.
பள்ளிமாணவர்களுக்கு படிப்பில் எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர்.உறுதியாக இருந்தார். அதனால் இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம், இலவச காலனி,இலவசபற்பொடி என்று ஏகப்பட்ட உதவிகள் செய்து படிக்கவைப்பதில் அக்கறை செலுத்தினார்.
முதியோர் மீதுஎம்.ஜி.ஆருக்கு உள்ள அக்கறை அளப்பரியது. அதனால் முதியோருக்கு நாள்தோறும் மதியஉணவு, ஆண்டுக்கு இரண்டு முறை இலவச உடை, மாத உதவித்தொகை போன்றவற்றை வழங்கி, ஒவ்வொருவீட்டுக்கும் தலைமகனாக எம்.ஜி.ஆர். விளங்கினார்.
விவசாயிகள்,நெசவாளர்களுக்கு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், பயிர் பாதுகாப்பு, விதை மானியம்போன்றவையும் புரட்சித்தலைவரால் அறிமுகம் செய்யப்பட்டது.
படித்து வேலையில்லாதஇளைஞருக்கு ஊக்கத்தொகை எம்.ஜி.ஆர். காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. வீட்டுக்குஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை எம்.ஜி.ஆர். லட்சியமாகக்கொண்டிருந்தார். இதற்காகவே மாதம் 9,000 வருமானத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று சட்டம் போட்டார். ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்புதோன்றவே, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து சட்டத்தை வாபஸ் பெற்றார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு31% என்ற அளவில் இருந்த இட ஒதுக்கீட்டை 50% என உயர்த்தியவர் புரட்சித்தலைவர். இடஒதுக்கீடு 50%க்குள் இருக்க வேண்டும் என்று வரையறை செய்திருந்தபோதும், மக்கள் தொகைகணக்கிட்டு 50% பிற்படுத்தப்பட்டோர், 18% தாழ்த்தப்பட்டோர் என 68% இட ஒதுக்கீடுகொண்டுவர காரணமாக இருந்தார். இதனை பின்னர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம்இயற்றி சட்டபூர்வமாகக் கொண்டுவந்தார்.
எம்.ஜி.ஆர். காலத்தில்41 கிளாஸ் என்ற சந்தேக கேஸ் போடும் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதன்படிசைக்கிளில் டபுள்ஸ் செல்பவர்களை மடக்கி கை ரேகை பதிந்து, ரிமாண்ட் செய்துவந்தனர்.இதனால் கிராமத்து ஏழைகள்தான் பாதிக்கப்பட்டனர். கணவனுடன் மனைவி சைக்கிளில் செல்ல முடியவில்லை,அப்பாவுடன் மகன் சைக்கிளில் செல்ல முடியவில்லை. இந்த சட்டத்தை நீக்கினார்புரட்சித்தலைவர். இதனால் ஏழைகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வடிக்கவேமுடியாது.
தமிழர்நலன் பாராட்டுவதில் எம்.ஜி.ஆரை எவரும் விஞ்சமுடியாது. ஈழத்தில் விடுதலைப்புலிகள்வலிமை பெறவும், வளர்ச்சி அடையவும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் ஏராளம். அதனால்தான்உலகமெங்கும் இருக்கும் ஈழத்தமிழர்கள் வீட்டில் இன்றும் எம்.ஜி.ஆர். படம்தொங்குகிறது. பிரபாகரனுக்குக் கொடுக்கும் மரியாதையை எம்.ஜி.ஆருக்குக் கொடுத்தனர்.தமிழ் ஈழம் உருவாகவேண்டும் என்பதற்காக எதையும் செய்துகொடுக்கும் துணிச்சல்காரராக எம்.ஜி.ஆர். இருந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எம்.ஜி.ஆர். காட்டிய ஆதரவு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியதாகும். களத்தில் போராடிய தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு பெருமளவில்தனது சொந்தப் பொறுப்பில் நிதி உதவி செய்ததோடு, மிகப் பெரும்உதவிகளையும்வழங்கினார்.
ஈழத்தமிழர்மீது இலங்கை அரசு நடத்திய இராணுவ தாக்குதலைக் கண்டித்து, தான் கருப்புடை தரித்ததோடு தனது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்களையும் கருப்புச் சட்டைப் போட வைத்தார். அன்றைய மத்திய காங்கிரஸ் ஆட்சி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஒப்பந்தங்களை திணித்து ஏற்குமாறு மிரட்டியபோது, முதல்வர் எம்.ஜி.ஆர். போராடும் விடுதலைப் புலிகளுக்கே ஆதரவாக இருந்தார்
.
பல அரசுகளால்பேசப்பட்டுவந்த கிருஷ்ணா நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கியவர் எம்.ஜி.ஆர்.சாதுர்யமாக என்.டி.ராமாராவுடன் பேசி ஒப்பந்தம் போட்டு காரியம் சாதித்தார்.
ரேஷன் அரிசி தருவதில்மத்திய அரசு சுணக்கம் காட்டுவது தெரிந்ததும் 1983-ம் ஆண்டு மெரினா பீச்சில்உண்ணாவிரதம் இருந்து காரியத்தை சாதித்தார்.
மதுவை தமிழகத்தில்இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கடுமையான சட்டங்களைக்கொண்டுவந்தார் முதல் முறை மதுவிலக்கு சட்டத்தில் பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை… இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, மூன்றாவது முறைபிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவசர சட்டம் கொண்டுவந்தார். ஆனால்மக்களும் எதிர்க்கட்சிகளும் இந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் மதுவிலக்கைரத்து செய்தார்.
தனியார்களுக்கு கல்லூரிவழங்கியபோது கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால் எதிர்காலத்தில் தமிழர் நலனுக்குஇதுதான் சரியான திட்டம் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் தீர்க்கதரிசனம் இன்றுஉண்மையாகிவிட்டது. உலகம் முழுவதும் ஐ.டி. துறையில் தமிழர்கள் சாதனை புரிந்துவெற்றிகரமாகத் திகழ்வதற்குக் காரணம் இந்த தனியார் பொறியியல் கல்லூரிகள்தான்.
கல்லூரிகளில் வேலை வாய்ப்புக் கல்வி அறிமுகமானதால் இளைஞர்களிடையே நம்பிக்கை தோன்றியது.
சர்வதேசப் பொருளாதாரக் கொள்கை காரணமாக தனியார்மயமாக்கல் விரைந்து வந்ததால் பள்ளிக்கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக் கல்வி வழங்குவதற்கான வாய்ப்பும் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைந்தது. தன்னிடம் வந்து வேலூர் மாவட்ட மாணவர்களுக்குப் படிக்க கல்லூரிகள் இல்லை. அரசு ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்று அவரது அமைச்சர் விசுவநாதன் கேட்டார் உடனே எம்.ஜி.ஆர் நீங்களே ஒரு கல்லூரி ஆரம்பியுங்கள். இந்த அரசு உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்றைய வி.ஐ.டி அகாடமி. எம்.ஜி.ஆர் ஆதரவுடன் பல அதிமுக கட்சியினர் பாலிடெக்னிக் தொழிற்பயிற்சி கல்லூரிகளையும் சுயநிதி கல்லூரிகளையும் தொடங்கி நடத்தினர். இவற்றில் எம்.ஜி.ஆர் ஏழை மாணவர்களுக்கு 25% இலவச ஒதுக்கீட்டைப் கேட்டுப் பெற்றார். மற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரிகளில் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் என்ற சட்டம் இயற்றினார். ஏழை மாணவர்கள் இலவசத் தொழிற்கல்வி பெற்றனர். இவை இன்று சர்வதேச தரத்துடன் பல்கலைக்கழகங்களாக வெளிநாட்டு மாணவர்களும் வெளி மாநில மாணவர்களும் படிக்கும் கலாலயமாக திகழ்கின்றன]. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது தொழில் பயிற்சி அல்லது வேலை வாய்ப்புள்ள தொழிற்படிப்புகளைப் படித்த மாணவர்கள் வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதித்தனர்.
நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர் மற்றும் பனையேறும் தொழிலாளிகளுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
மீனவர்களுக்கான முயற்சியில் அவர்களுக்கென சிறப்பு வீட்டு வசதி திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் கடற்கரையில் குப்பங்களின் குடிசைகளில் வாழ்ந்து வந்த இவர்களின் நிலை விரைவில் மாறியது.
எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்தில் கிராமங்களில் முன்சீஃப் கர்னம் போன்ற பொறுப்புகளில் இருப்பவர்கள் மேலாதிக்க சாதியினர் என்பதால் அவர்களில் பலர் தலித் விரோத பாரபட்சமாக நடக்கின்றனர் என்பதை அறிந்து அந்தப் பதவிகளை ஒழித்தார். *அரசுத் தேர்வு மூலமாக கிராம நல அதிகாரி [வி.ஏ.ஓ] பொறுப்புக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புதிய முறையை அறிமுகம் செய்தார்*. இப்போது தலித் மக்களும் கிராம நிர்வாக அதிகாரியாகப் பொறுபேற்றனர்
இதனால் ஹெட்மேன்,கர்ணம் போன்ற காலம்காலமாக ஒரு குடும்பத்தாரே வகித்த பதவி அடியோடு ஒழிக்கப்பட்டது
நவீன விவசாய முறைகள் மற்றும் கூட்டுப்பண்ணை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்த எம்ஜிஆர், அவர் முதல்வரானதும் 325 கோடிக்கான விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார். பாசனத்துக்காக 3.31 இலட்சம் பம்பு செட்களுக்கு மின் இணைப்பு வழங்கினார். பேரிடர் காலங்களில் விவசாயிகள் நஷ்டமடையக் கூடாது என்பதற்காகப் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தார்,
விதவை பெண்கள் மறுவாழ்வு மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். விதவைகளை மறுமணம் செய்வோருக்கு ரூ 5,300 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் ஆயிரக்கணக்கான விதவைகள் பலனடைந்தனர்.
ஒருமுறை ஒருவர் எம்.ஜி.ஆரிடம் வந்து விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே என்று வேண்டினார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது” என்றார். எம்.ஜி.ஆரின் இந்த பதில் ஆண்கள் மற்றும் பெண்களின் உளவியலை அவர் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதையும் விதவை பெண்கள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்று அவர் கருதியதையும் புலப்படுத்துகிறது. ராணுவத்தில் பணியாற்றி இறந்து போனவர்களின் மனைவிமார் தன் கணவரின் ஓய்வூதிய பலன்களைப் பெற்ற போதிலும் மறு மணம் செய்துகொள்ளலாம் என்ற சட்டம் வந்துவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்திலேயே இந்தச் சலுகையை விதவை பெண்களுக்கு வழங்கிவிட்டார்
என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’’ என்பார். அவருக்கு இயற்கையாகவே தமிழ் மொழியின் மீது பற்றும் ஆர்வமும் இருந்ததால் அவர் தானும் பல தமிழ் நூல்களை வாசித்து தன் தமிழறிவை வளர்த்துக்கொண்டார். படித்த தமிழறிஞர்களிடமும் பலவற்றை கேட்டறிந்தார், அவர் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு கி.ஆ.பெ. விசுவநாதம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் பன்மொழிப்புலவர் தேவநேயப்பாவாணர் போன்ற தமிழறிஞர்களை கௌரவித்து மணிமண்டபங்கள் எழுப்பினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் இறந்து ஒரு மாதத்துக்குள் அவருக்குச் சிலை வைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு சிலை பணிகள் துரிதமாக நடந்தன. தெ பொ மீ அவர்களின் தமையனார் சதாவதானி தெ. பொ. கிருஷ்ணசாமி பாவலரின் பதி பக்தி மேடை நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். அது திரைப்படமாக இருந்த சமயத்திலும் எம்.ஜி.ஆர் அதில் நடிப்பதாக இருந்தது. ஆக அவர்கள் குடும்பத்துக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த நீண்ட நாள் தொடர்பு சிலை தொடர்பான பணிகளை விரைவுபடுத்தியது. எம்.ஜி.ஆர் தன் பதவிக் காலத்தில் தமிழ்த்தொண்டு செய்த பெருமக்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரியில் 2% ஒதுக்கீடு வழங்கினார்.
1981இல் மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தினார். அதன் தொடக்க விழாவில் சிறிய பெரிய என அனைத்துக் கட்சித் தலைவர்களும் சிறப்புரையாற்றி அந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்தார். அப்போது பொதுமக்களும் இம்மாநாட்டில் பங்கேற்று மகிழும் வகையில் அவர்கள் கண்டும் கேட்டும் ரசிக்க முத்தமிழ் அரங்கங்களையும் மாபெரும் பொருட்காட்சி ஒன்றையும் நடத்தினார். பல்கலைக்கழகத்தில் கருத்தரங்குகளில் அறிஞர் பெருமக்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கி விவாதங்கள் நடத்தினர்.
மதுரை மேற்கில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜனவரி ஒன்று முதல் பத்து நாள்கள் வரை தமிழகத்து மக்கள் இலட்சக் கணக்கானோர் தமிழில் தலை சிறந்த பேச்சாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் நடத்திய கவியரங்கம், பட்டி மன்றம், நாட்டிய நாடகம், இன்னிசை கச்சேரி. போன்றவற்றை கண்டும் கேட்டும் ரசித்தனர்.
எம்.ஜி.ஆர் வேறு எந்த ஆட்சியிலும் வேறு எந்த முதல்வரும் தமிழுக்குச் செய்யாத ஒன்றை தம் ஆட்சியில் செய்தார். அதுதான் தஞ்சையில் தமிழுக்கென்று ஆயிரம் ஏக்கர் பரப்பில் தமிழாராய்ச்சிக்கென்று அவர் தொடங்கிய தமிழ்ப் பலகலைக்கழகம் ஆகும். ஆனால் எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த முதல்வர்கள் அவரது நோக்கத்தை பாழ்படுத்திவிட்டனர். இப்பல்கலை உலகத்தரத்துக்கு உயர்ந்திருக்க வேண்டிய ஓர் அமைப்பாகும்.
மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர் சிறப்புற நடத்தினார். அவர் ஆட்சிக்காலத்தில் இன்னும் பல வகையில் அவர் தமிழுக்கும் தமிழ்ப் பெரியோருக்கும் உதவினார்
இது போக விடுபட்டது நிறைய..
இதனால் தான் புதிதாக அரசு அமைக்க விரும்பும் புதியவர்கள் MGR ஆட்சியைக் கொண்டு வர முனைகின்றனர்!
ஆனால்? அப்போது போல் இப்போதும் MGR மீது காழ்புணர்ச்சி உள்ளவர்கள் புழுதி வாரி தூற்றி அவர் புகழை குலைக்க முயற்சிக்கின்றனர்
இன்றைய தலைமுறையினருக்கு இவ்வாறாக தவறான முறையில் செய்திகள் மடைமாற்றம் செய்யப்படுவது கொடுமை!