சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் பாரத பிரதமரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு கலந்தாய்வு கூட்டம் நடந்தது
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட முகாம் நடைபெற்றது 
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி, அறிவுரையின்படி சேத்துப்பட்டு பேரூராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி துவக்கப்படாத  பயனாளிகளிடையே கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது. இம்முகாமில்  தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர்,  பேரூராட்சி செயல் அலுவலர், ஆனந்தன், தலைமையில் நடைபெற்றது இதில் பேரூராட்சி  இளநிலை பொறியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகியோர் கலந்துக் கொண்டனர் மேலும் மகேந்திரா நிதி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று பயனாளிகளுக்கு கடன் உதவி அளிப்பது குறித்து விளக்கு உரையாற்றினார்கள் பயனாளிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்