இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் A.R.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிலப்பட்டா, புதிய குடும்ப அட்டை,பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கடன் உதவி, நிதி உதவி, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, காவல்துறை பாதுகாப்பு, மற்றும் மின் இணைப்பு என 320 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்)ஜெயராம், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது)தே.இளவரசி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இராணிபட்டை மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...