வாலாஜா அரசுதலைமை மருத்­து­வ­மனை­யின் அவலநிலை..?
வாலாஜா அரசுதலைமை மருத்­து­வ­மனை­யின் அவலங்கள்
சிகிச்சை குறைபா­ட்டால்
நோயா­ளி­கள் பெரும் அவதி
நட­வ­டிக்கை எடுப்பாரா
 மாவட்ட ஆட்சியர் !


வாலா­ஜாபேட்டை அரசு
மருத்துவமனையில்
சிகிச்சை குறைபாட்டால்
நோயா­ளி­கள் அவ­திப்­பட்டு
வரு­கின்­ற­னர். சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் உடனே இது குறித்து நட­வ­டிக்கை  எடுக்கவேண்­டு­மென்று
கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.
வாலா­ஜாபேட்­டை­யில்
அரசு மருத்­து­வ­மனை 
இயங்கி வரு­கி­றது. இந்த மருத்­து­வ­மனை ராணிப்­பேட்டை மாவட்­டத்­தின்
தலைமை மருத்­து­வ­ம­னையா­கும். இந்த மருத்­து­வ­மனை அண்­மை­யில் நவீன முறை­யாக்­கப்­பட்­டது.
ஆனா­லும், நோயா­ளி­க­ளுக்கு தேவை­யான வச­தி­க­ளில்குறைபாடு இருக்­கி­றது என்­றும், நோயா­ளி­கள் சரி­யாக கவ­னிக்­கப்­ப­டு­வதிலலை என்றும் தொடர்ந்து குற்­றம் சாட்­டப்­பட்டு வரு­கி­றது. மேலும் இங்கு அனு­ம­திக்­கப்­படும் நோயா­ளி­களை கவ­னிப்­ப­தற்கு ஒப்­பந்த ஊழி­யர்­கள்­தான் பணி­யில் அமர்த்­தப்­பட்­டுள்ள­னர். அவர்­கள் சரி­யாக நோயா­ளி­க­ளுக்கு பதில் அளிப்­ப­தில்லை என்­றும் கூறப்­ப­டு­கி­றது. இரவு நேரப் பணி­யில் இருக்­கும் செவி­லி­யர்­கள் நோயா­ளி­களை கவனிக்­கா­மல் அலட்­சி­ய­மாக இருப்­ப­தா­க­வும் தெரி­கி­றது. அங்கு வரக்­கூ­டி­ய­வர்­ களை அடுக்­கம்­பாறை அரசு மருத்­து­வ­ம­னைக்கு செல்­லு­மாறு அங்­குள்­ள­வர்­கள் சொல்­வ­தாக நோயா­ளி­ களே புகார் கூறு­கின்­ற­னர். இது குறித்து சம்­பந்­தப்­ பட்ட அதி­கா­ரி­கள் உடனே நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்று நோயா­ளி­கள்  கோரிக்கை விடுத்­துள்­ள­னர். 

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.