நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.செல்லகுமார் வலியுறுத்தல்
தமிழகத்தில் 100 மற்றும் 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் மட்டுமே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கையை அனைத்து கல்லூரிகளிலும் தலா 250 எம்.பி.பி.எஸ் இடங்களாக உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.செல்லகுமார் வலியுறுத்தியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழகத்தில் 4 அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டுமே தலா 250 இடங்கள் உள்ளன. இதேபோல், அண்ணாமலை பல்கலைகழக மருத்துவக் கல்லூரி உள்பட 9 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதைத் தவிர சென்னை இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி, ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் மட்டுமே உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதேபோல், தனியார் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் கல்லூரிகளிலும் தலா 250-க்கும் குறைவான இடங்கள் உள்ள கல்லூரிகள் உள்ளன. எனவே, தமிழகத்தில் 100 மற்றும் 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் மட்டுமே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தலா 250 எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களாக உயர்த்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் நிகழாண்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான மருத்துவ கனவுகள் நனவாகும்.
11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நடப்பு கல்வி ஆண்டில் (2020-2021) மாணவர் சேர்க்கை வேண்டும்...
தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டிணம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேவையான கட்டட வசதிக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கினால் 1200- க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணிகள் முழுமை பெறாத நிலையில், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவ படிப்புக்கான கல்லூரி வகுப்புகளை தற்காலிகமாக நடத்தலாம். இதனால் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரமுடியும்.இந்த நிலையில், தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு நடப்பு கல்வி ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கையை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாகும். எனவே, கிராமப் புற ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புக்காக காத்திருக்கும் மாணவர்களின் மருத்துவ கனவுகளை நனவாக்கும் வகையில் தமிழக அரசு போர்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழகத்தில் 4 அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டுமே தலா 250 இடங்கள் உள்ளன. இதேபோல், அண்ணாமலை பல்கலைகழக மருத்துவக் கல்லூரி உள்பட 9 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதைத் தவிர சென்னை இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி, ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் மட்டுமே உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதேபோல், தனியார் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் கல்லூரிகளிலும் தலா 250-க்கும் குறைவான இடங்கள் உள்ள கல்லூரிகள் உள்ளன. எனவே, தமிழகத்தில் 100 மற்றும் 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் மட்டுமே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தலா 250 எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களாக உயர்த்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் நிகழாண்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான மருத்துவ கனவுகள் நனவாகும்.
11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நடப்பு கல்வி ஆண்டில் (2020-2021) மாணவர் சேர்க்கை வேண்டும்...
தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டிணம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேவையான கட்டட வசதிக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கினால் 1200- க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணிகள் முழுமை பெறாத நிலையில், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவ படிப்புக்கான கல்லூரி வகுப்புகளை தற்காலிகமாக நடத்தலாம். இதனால் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரமுடியும்.இந்த நிலையில், தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு நடப்பு கல்வி ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கையை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாகும். எனவே, கிராமப் புற ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புக்காக காத்திருக்கும் மாணவர்களின் மருத்துவ கனவுகளை நனவாக்கும் வகையில் தமிழக அரசு போர்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.